புதன், 15 ஜூன், 2011

தாயுமானவன் தயங்குவது ஏனோ

மண்ணை மூலமாகக் கொண்டு 
மண்பாண்டங்கள் செய்தால் 
அது எனக்கு பயன்படும் 
தன்னை மூலமாகக் கொண்டு 
என்னைப்படைத்தாயே இதில்
உனக்கு என்ன பயன் ?
தான் இன்புறுவது பிறர்
இன்புறககானவா? அபோது
நான் துன்புறுவதும் நீ 
துன்புறுவது தானே இந்த 
உன் திருவிளையாடல் 
என்னை திருத்தி உன்னை  
அடைவதென்றால் நான் படும்  
துன்பமும் இன்பமே அன்றி 
வேறென்ன சொல்ல இறைவா
பட்டது போதும் என்னுடைய
பொருளை நான் பாது காக்கிறேன்
என்னைக்காக்க உன் அருள் வேண்டும்
தாமதிப்பது உன் கருணை என்றால்
தாயுமானவன் தயங்குவது ஏனோ
உன்னை உண்ணும் உணர்வையாவது 
நல்குவாயாக நலமுடன் வாழ


செவ்வாய், 5 ஏப்ரல், 2011

பிரமச்சாரியாய் என்னை வாழவிடு

மனமே எனக்கு மலர்கள் பிடிக்கும்
ஏன் எனில் இறைவனைக்கூட
வர்ணிக்கலாம் ஆனால் அதன்
வர்ணத்தையும் மணத்தையும்
வர்ணிக்க வார்த்தைகள் ஏது?
எனக்கு மரங்களைப் பிடிக்கும்
ஏன் எனில் கைமாறு கருதாது
அது தன்னையே கொடுத்து
தன் வித்தையும் அழித்து இன்னும்
ஒரு மரத்தைக் கொடுப்பதால்
எனக்கு பறவைகளைப் பிடிக்கும்
ஏன் எனில் சிறகு முளைத்த பின்
தன்னைத்தனே காத்துக் கொள்வதால்
எனக்கு விலங்குகளைப் பிடிக்கும்
ஏன் எனில் அன்பையும் அறத்தை
என்றுமே சார்ந்து நிற்பதால்
எனக்கு பூமியைப் பிடிக்கும்
ஏன் எனில் எவ்வளவு தோண்டினும்
வானத்தையே சார்ந்து நிற்பதால்
எனக்கு வானத்தைப் பிடிக்கும்
ஏன் எனில் பிரபஞ்சத்திற்கே இடம்
கொடுத்து நமக்கும் எல்லாமாய்
வாழ்வுக்கு ஆதாரமாய் இருப்பதால்
காற்றை எனக்கு பிடிக்கும்
ஏன் எனில் எல்லோர்க்கு அது ஆதாரம்
இறைவனுக்கு என்னை பிடிக்க வில்லை
ஏன் எனில் மனம் என்னுள் அடங்க வில்லை
அறிவிற்கு இடம் கொடுத்து இறைவனை
நான் சார்ந்து நிற்க வில்லை
மனமே என்னுள் அடங்கி விடு
உன்னையே சார்ந்து நின்று
பிரமச்சாரியாய் என்னை வாழவிடு

திங்கள், 11 அக்டோபர், 2010

வெள்ளி தோன்றினால் தானே விடியும்.

நீலகண்டனை நெஞ்சிலே நிறுத்தி
நெஞ்சக் கனலை வஞ்சகமாக்கி
வாயசைவை வார்த்தைகளாக்கும்
மனமே என்னை விட்டு நீங்கி விடு
ஞாயிறும் திங்களும் நாதபிரமும்
கருவரையில் உறங்கும் வரை
வெள்ளியும் இல்லை விடிவும் இல்லை.

கலியுகத்தில் உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்தாம் அதிகம். மனம் படைத்தோம் உன்னை நினைப்பதற்கு என அவரவர் தெய்வங்களை யார் நெஞ்சிலே நிறுத்தி வாழ்கின்றனர். மனம் நான் எனது என்று நிலை கொண்டு உயிர்களை உபயோகித்து பொருள் களை நேசிப்பவர்கள் உள்ள வரை இந்த நிலை நீடிக்கும். ஆகவே தான் நெஞ்சக்கனலை வஞ்சகமாக்கி வாயசைவை வார்த்தை களாக்கி வாழ்கிறோம்.உலகத்தோடு ஒட்ட ஒழுகல் இதுதான் என்று திருவள்ளுவரையும் துணைக்கு அழைப்போம்.வாயசைவை வார்த்தைகளாக்காது மூலாதாரத்தில் உள்ள வாக்கை உள்ளவாறு வெளிப்படுத்தினால் நிலையான புகழை அடையலாமே.

கருவரையில் (மூலாதாரத்தில்) நாதமும், ஞாயிறைப் போன்ற குனமும் திங்களைப் போன்ற குனமும் இயற்கையாகவே பதிவுகளாக உள்ளது. ஆகவே வாழ்க்கையை நிகழ் காலத்தில் எதார்த்தமாக வாழ வேண்டும் என நினைந்து எழுதிய வார்த்தைகளே இப்பதிவு. அவ்வாறு இல்லை எனில் நம் வாழ்க்கையில் வெள்ளி முளைக்காது. அதாவது வெள்ளி தோன்றினால் தானே விடியும்.

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

குறையும் நிறையும் வாழ்வியல்

 குறையும் நிறையும் வாழ்வியல்
 குறையில் நிறைவு கண்டால்
 குறைவிலி என்பர்.
 நிறைவில் குறைவு கண்டால்
 குறைமகன் என்பர்.
 மனமே என்னுள் அடங்கி விடு
 குறைவிலியாய் வாழ விடு.

பாரதியார் வாழ்க்கை குறைகள் நிறைந்ததா இல்லையா என்பதை அவர் மனைவியிடம் தான் கேட்க வேண்டும். காக்கை குருவி எங்கள் ஜாதி என சொல்லி அன்றைய உணவுக்கு இருந்த தாணியங்களை இறைத்து மகிழ்ந்தால் எந்த மனைவிதான் இந்த கலியுகத்தில் ஏற்றுக் கொள்வாள். இப்படி சிந்திக்கும் போது பாரதி குறை மகன்தான். இன்றும் அவர் புகழ் நிலைத்து இருக்கிறதே அதை சிந்திக்கும் போது அவர் குறைவிலிதான் அதாவது குறையில் நிறைவு கண்டவர்.

நம்முடைய வாக்கு என்றும் நிலைத்து நின்றால் நாமும் குறைவிலி  தான். நாம்தான் நிறைவான நம் வாழ்க்கையில் குறை காண்கிறோமே. ஆகவே குறைமகன்தான், அதாவது கிடைத்ததில் திருப்தி அடைவதில்லையே.  மனதை நம்முள் அடக்கக் கற்றுக் கொள்வோம் அப்புறம் சிந்திப்போம் .

சனி, 9 அக்டோபர், 2010

பனித்துளி அழகானது

பனித்துளி பார்பதற்கு அழகானது
வருவதும் போவதும் தெரியாது
ஆதவன் வரவால் அகன்று விடும்
மனதை மயக்கும் உறவுகளைப் போல்
மனமே என்னுள் அடங்கி விடு
உற்றாரைக் கண்டு உறவு கொள்

உற்றார் யார் ?
கடைசி வரை யார் கூட வருவார்களோ அவர்களே உற்றார் . வீடுவரை தான் உறவு . காடு வரை பிள்ளை . கடைசி வரை நாம் செய்யும் பாவ புண்ணியம் . பாவ புண்ணியம் இவைகளை  ஊட்டுபவன் எல்லாம் வல்ல இறைவன் . அவனைக் கண்டுகொள்ள அவன் அருள் வேண்டுமே ? . மனம் நம்முள் அடங்கினால் அவனைக் கண்டு நாம் உறவு கொள்ளலாம் .

கனவு

ஆசைப் பட்ட வாழ்க்கை
ஆட வேண்டும், பாட வேண்டும்,
சொல்லுவதை சொல்லும் வரை
மறக்க வேண்டும். இது என்றும்
நிலைக்குமா? கனவின் கடைசி
நினைவை பற்றிக்கொண்டாய்.
மனமே என்னுள் அடங்கி விடு !
தூங்கும்போது தூங்கி,
விழிப்புடனே வாழ விடு.

கனவு முழுமையாக நினைவுக்கு வராது அதன் கடைசி நினைவு முதலில் ஞாபகத்திற்கு வரும் கனவு அற்ற வாழ்க்கை சிரமம்தான் ஆனாலும் மனம் நம்முள் அடங்கி விட்டால் நிம்மதியான உறக்கம்தான் காலையில் விழிப்புடன் கடமைகளை நிறை வேற்ற வேறென்ன வேண்டும் . ஆனால் கண்டது, கேட்டது ஆகிய எல்லா நினைவுகளும் இரவிலும் சரி பகலிலும் சரி , எங்கே நிகழ் காலத்தில் வாழ விடுகிறது . 

வெள்ளி, 8 அக்டோபர், 2010

சொல்லி விட்டு செல்கிறேன்

மரணம் மகத்தானது . இத்தருணத்தில்
கேட்ட கேள்விக்கு தாகூர் சொன்ன பதில் .
உண்மையை மனம் உள்ளவரை யாரால்
உரைக்க முடியும் . ஆகவேதான் நானும்
எதற்கும் சொல்லிப் பார்க்கலாமே என்று
எழுதியது . அவ்வளவுதான் . சிவம் தான்
(இயற்கை என்று எடுத்து கொண்டாலும்
சரி)  உள்ள பொருள் . அழியும்
தன்மை உள்ளது அழியாததை எவ்வாறு விளக்க முடியும் ?